Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தேசிய விருதை சூப்பர் ஸ்டாருக்கு சமர்ப்பிக்கிறேன் ! - நடிகர் தனுஷ்
சென்னை: ஆடுகளம் படத்துக்காக கிடைத்த தேசிய விருதினை தனது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமர்ப்பிப்பதாக தனுஷ் கூறியுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரு வாரங்களாக ரஜினி சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தற்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு சிறப்பு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இந்நிலையில் ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு 2 தேசிய விருதுகளும், ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தனது ட்விட்டரில் தனுஷ் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
"இந்த தேசிய விருதை ரசிகர்கள் சார்பாக என் மாமனார் ரஜினிக்கு சமர்ப்பணம் செய்கிறேன். அவர் விரைந்து நலம் பெற்று வரவே இந்த சமர்ப்பணம். அவர் குணமாகி வந்த பிறகுதான் தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவேன். இந்த விருதுக்காக என்னை வாழ்த்திய கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்!"