Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மர்மயோகியும் மர்ம தகவல்களும்
இதுகுறித்து இருவரும் கூட்டாக நேற்று அறிக்கை விடுத்துள்ளனர். இதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாக நான் எழுதி, இயக்கி தயாரிக்கும் மர்மயோகி பற்றிய பல புனை சுருட்டுகள் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன.
மர்மயோகி பற்றிய பெரும்பாலான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது எங்களை பொறுத்தவரை ஆரோக்கியமான விளம்பரமில்லை.
ஆதாரமற்ற செய்திகள் அவதூறுக்கு நிகரானது என்பதே என் தாழ்மையான கருத்து. நவீன கார்ப்பரேட் யுகத்தில், பத்திரிக்கை வாயிலாக வியாபாரம் பேசுவது தொழில் ஒழுக்கமல்ல.
உலகத் தரமான படைப்பு:
பல மில்லியன் டாலர்கள் செலவில் தயாராகும், பன்மொழிப் படமான மர்மயோகி உலக தரப் படமாகவும் உங்களுக்கு பரிமாறப்பட வேண்டும் என்பதில் ராஜ்கமல் நிறுவனமும், பிரமிட் சாய்மீரா நிறுவனமும் பேரார்வத்துடன் இயக்கி வருகின்றன. விரைவில் தொடக்க விழா பற்றி செய்திகளை அறிவிப்போம், என்று கூறியுள்ளார்.
கமல் இப்படி அறிக்கை வெளியிட்டதற்குக் காரணம், இந்தப் படத்தை பிரமிட் சாய்மிரா நிறுவனம் கைவிட்டுவிட்டது என்றும், ரஜினி மகள் சௌந்தர்யாவும் வார்னர் பிரதர்சும் இணைந்து தயாரிக்கப் போகின்றனர் என்றும் வெளியான செய்திகள்தான்.
இன்னொன்று இப்படத்தில் பட்ஜெட். ரூ.100 கோடியில் உருவாகும் படம் இது என ஆரம்பத்தில் கமல் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது கமல்-சாய்மிரா இருவருமே, படத்தின் பட்ஜெட் குறித்து எந்த தகவலும் இப்போது சொல்வதற்கில்லை எனக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பிரமிட் சாய்மிரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் கூறியிருப்பது:
படத்தின் பட்ஜெட் குறித்து இப்போது எதுவும் பேசவேண்டாம் என முடிவு செய்துள்ளோம். இது பல மில்லியன் டாலர்களில் உருவாகப் போகும் படம். எனவே அதை இப்போதே திட்டமிட்டுக் கூறுவது சரியாகாது.
தமிழ், தெலுங்கு, இந்தி தவிர ஆங்கிலத்திலும் இப்படத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளோம். எனவே அதிக செலவாகும். ஆனால் உலக அளவில் பேசப்படும் படமாக மர்மயோகி இருக்கும் என்றார்.