twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக் மோசடி வழக்கு: காஞ்சிபுரம் கோர்டில் நடிகர் சிட்டி பாபு ஆஜர்

    By Sudha
    |

    City Babu
    காஞ்சிபுரம்: காமெடி நடிகர் சிட்டி பாபு செக் மோசடி வழக்கில் இன்று காஞ்சிபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    சின்னத் திரை மற்றும் பெரிய திரையில் காமெடியில் கலக்கி வருபவர் சஜாயத் அஜீப் (எ) சிட்டி பாபு. அவர் சிட்டி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதற்காக கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் கடனாக ரூ. 2 லட்சம் வாங்கினார்.

    கடனைத் திருப்பிக் கொடுக்கையில் ரொக்கமாக கொடுக்காமல், செக்காக கொடுத்தார். ஆனால் அந்த செக், சிட்டிபாபுவின் வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பி விட்டது. இதையடுத்து ஆறுமுகம் சிட்டி பாபு மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு காஞ்சிபுரம் ஜெ.எம்-1 நீதிமன்றத்தில் நடக்கிறது. இதில் ஆஜராகுமாறு சிட்டி பாபுவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே அவர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    English summary
    Comedian City Babu had borrowed Rs. 2 lakh from a guy named Arumugam to run his City enterprises. After a while City Babu gave a cheque to Arumugam which bounced. Then Arumugam filed a case against the actor. City Babu appears before the court today in this case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X