இன்னொரு குழந்தை பிறக்கும்-ஈழம் குறித்து கமல் கவிதை

அந்தக் கவிதை...
காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…
காணாமல் போகும் பட பிரதிகள்..
இந் நிலையில் எப்ஐசிசிஐ மாநாட்டின் இறுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாஸன் கூறுகையில்,
திரைப்படங்களுக்கான காப்புரிமை முறைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல சினிமாவை முன்னுரிமை பெற்ற தொழிலாக அங்கீகரிக்க வேண்டும்.
திரைப்படங்களில் காவியம் என நாம் போற்றிய பல படங்களின் பிரதிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. சில படங்களுக்கு பிரதிகளே இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.
அவ்வளவு ஏன்... எனது தேவர் மகன் படத்தின் பிரதியே கூட காணமல் போகும் துரதிருஷ்டம் வந்துவிட்டது.
அதற்குத்தான் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தத் தொடங்கவேண்டும் என்கிறேன்' என்றார்.


Click it and Unblock the Notifications











