நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு!
பெங்களூர்: மனைவியைக் குத்திக் கொல்ல முயன்று கைதாகியுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் மறுத்துள்ளது பெங்களூர் நீதிமன்றம்.
தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து காயப்படுத்தியதாகவும் குத்திக் கொல்ல முயன்றதாகவும் செப் 9 -ல் கைது செய்யப்பட்டார் தர்ஷன்.
சிறையில் அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மனைவி விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபல நடிகரான தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட வாய்ப்புள்ளது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தர்ஷனுக்கு ஜாமீன் மறுக்கப்படுவது இது இரண்டாவது முறை.
தர்ஷன் விவகாரத்தில் விஜயலட்சுமி கூறியதை மட்டுமே நம்பி, முன்னணி நடிகை நிகிதாவை கன்னட தயாரிப்பாளர்கள் தடை செய்ததும், அதைத் தொடர்ந்து திரையுலகில் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் இறுதியில் நிகிதாவிடம் தயாரிப்பாளர்கள் மன்னிப்பு கேட்டு தடையை விலக்கியதும் நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











