Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எந்திரன் ரிலீஸுக்கு முன்பே இமயமலை செல்லும் ரஜினி!
ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகமெங்கும் 3000 திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் டிக்கெட் விற்பனை இப்போதே துவங்கிவிட்டது. உலகமெங்கும் விற்பனையில் பெரும் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்தியப் படம் ஒன்று, குறிப்பாக தமிழ்ப் படத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள முக்கியத்துவம் மற்றும் வர்த்தக அங்கீகாரம் பலரையும் விழிவிரிய வைத்துள்ளது.
இந்தப்படத்தின் இறுதி கட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நேற்று முடிவுக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் மேற்பார்வையில் ஏ ஆர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.
அனைத்தும் முடிந்ததும், ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் ரஜினிக்கு எந்திரனின் முதல் பிரதியை போட்டுக் காட்டுகின்றனர். படத்தைப் பார்த்த கையோடு இமயமலைக்குச் செல்லும் ரஜினி, ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்புகிறார்.
இம்முறை பாபாவின் குகைக்குச் செல்லும் ரஜினி, அங்கிருந்து மானசரோவர் பகுதிக்கும் செல்கிறார். அவருடன் நெருங்கிய நண்பர்கள் குழுவும் செல்கிறது.