Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மலேசியாவில் எம்ஜிஆர் சிலை: திறந்து வைக்கிறார் சத்யராஜ்!
ஐந்தரை அடி உயர வெண்கலச் சிலை இது. கும்பகோணத்தில் உருவாக்கப்பட்டது. சரவணன் ஸ்தபதி, கணேஷ் ஸ்தபதி ஆகியோர் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர்.
மலேசியாவின் பேரக் மாநிலம் உலுசபெத்தாங் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுகிறது. மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரும் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கோ சூ கூன் தலைமை வகிக்கிறார்.
இந்த விழாவில் எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்படக் கண்காட்சியும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. கண்காட்சியில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அரிய பொருள்கள் இடம்பெறுகின்றன.
மலேசியாவில் கோலாலம்பூரில் இந்தியாவைச் சேர்ந்த விவேகானந்தருக்கு மட்டுமே சிலை இருக்கிறது. இவரையடுத்து, இந்தியத் தலைவர் ஒருவருக்கு மலேசியாவில் சிலை நிறுவப்படும் பெருமை எம்.ஜி.ஆருக்குக் கிடைத்துள்ளது.
ஜூன் 25 ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தச் சிலை திறப்பு விழாவில் திரைப்பட நடிகர்கள் மயில்சாமி, வின்சென்ட் அசோகன், எம்.ஜி.ஆர். நற்பணி அமைப்பின் தலைவர் தாமோதரன் ஆகியோருடன் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பங்கேற்கிறார்கள்.