ரஜினி கண்டிஷன்- வாசு டென்ஷன்!

By Staff

Rajini with P Vasu
மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தில் மம்முட்டி கேரக்டர் எப்படி இருந்ததோ, அதில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல், குசேலன் படத்தில் தனது கதாபாத்திரம் இருக்க வேண்டும் என இயக்குநர் பி.வாசுவுக்கு நிபந்தனை விதித்துள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் வாசு அப்செட் ஆகியுள்ளார்.

மலையாளத்தில் சீனிவாசனின் கதையில், மம்முட்டி நடிக்க வெளியான படம் கத பறயும் போள். இப்படத்தில் மம்முட்டியின் கேரக்டர் மிகச் சிறியது. ஆனால் சீனிவாசன் கேரக்டர்தான் பெரியது. கிட்டத்தட்ட அவரைச் சுற்றித்தான் படம் நகரும்.

மம்முட்டி சூப்பர் ஸ்டார் நடிகராக அப்படத்தில் நடித்திருப்பார். சீனிவாசன், சவரத் தொழிலாளியாக வருவார். இருவரும் பால்ய நண்பர்கள்.

இப்படத்தைத்தான் பி.வாசு தமிழில் குசேலன் என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளார். மம்முட்டி வேடத்தில் ரஜினியும், சீனிவாசன் வேடத்தில் பசுபதியும் நடிக்கவுள்ளனர். மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடி கிடையாது. சீனிவாசன் ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

முதலில் ரஜினிக்காக கதையை மாற்ற முடிவு செய்தார் வாசு. ரஜினி கேரக்டரை பெரிதாக்கி, பசுபதி கேரக்டரை சிறிதாக்கினார். மேலும், ரஜினிக்கு ஜோடியும் உருவாக்கினார். இந்த ஜோடியாக நயனதாராவும் புக் ஆகியுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த மாற்றத்திற்கு ரஜினி ஒப்புதல் தெரிவிக்கவில்லை. மலையாளத்தில் எப்படி எடுத்தார்களோ அதேபோலத்தான் குசேலனையும் எடுக்க வேண்டும் என உறுதியாக கூறி விட்டார். ஆனால் இதற்கு வாசு சம்மதிக்கவில்லை. அப்படி எடுத்தால் இன்னொரு வள்ளி போல ஆகி விடும் என்று ரஜினியிடம் எடுத்துக் கூறினார்.

ஆனால் இந்தக் கூற்றை ரஜினி ஏற்கவில்லையாம். ஒரிஜினல் கதையில் சற்றும் மாற்றம் செய்யாமல் எடுக்க வேண்டும் என்று கூறி விட்டாராம்.

இதுதவிர 10 நாட்கள் கால்ஷீட் தருவதாகவும், அதற்குள் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விடுமாறும் ரஜினி கூறியுள்ளாராம். 15 நாட்களில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவது என்பது சமீப காலங்களில் இதுவே முதல் முறையாகும். அப்படியானால், அவருக்குப் படத்தில் எத்தனை காட்சிகள் இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

மார்ச் மாதம் 10 நாட்களும், ஏப்ரல் மாதம் 5 நாட்களும் கால்ஷீட் கொடுப்பதாக ரஜினி கூறியுள்ளாராம்.

ரஜினியின் இந்த நிபந்தனைகளால் பி.வாசு அப்செட் ஆகியுள்ளாராம். ரஜினியை சமாதானப்படுத்த முடியுமா என்று அவர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் திட்டமிட்டபடி பிப்ரவரி 15ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவில்ைல.

ரஜினியின் இந்த பிடிவாதனமான நிபந்தனையால் படத்தில் நயனதாரா நடிப்பாரா என்பதிலும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

வாசுவுக்கு இன்னொரு அப்செட்டாக காமெடிக்குப் புக் ஆகியிருந்த விவேக் திடீரென ஜகா வாங்கி விட்டாராம். அவரும், பசுபதியும் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்க கால்ஷீட் இடிக்கிறதாம். இதனால் படத்திலிருந்து விலகி விட்டார் என்கிறார்கள். இதனால் வடிவேலுவை பிடிக்கலாமா என வாசு யோசித்து வருகிறாராம்.

ரஜினியின் முடிவு வாசு தவிர படத் தயாரிப்பாளர்களான செவன் ஆர்ட்ஸ் விஜயக்குமார், புஷ்பா கந்தசாமி, அஸ்வினி தத் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாம்.

ரஜினியின் முடிவைப் பார்த்தால், அதிரடியான பாட்டு அல்லது பைட்டுடன் முதல் காட்சியில் அவர் அறிமுகமாகும் வாய்ப்பு இல்லை. மேலும், கலர் கலர் டிரஸ்ஸில் நாயகியுடன் டூயட் பாடுவதற்கான வாய்ப்பும் இல்லை என்று தெரிகிறது.

ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் நல்ல படத்தை விரும்புபவர்களுக்கு, அதிலும் ரஜினியை வித்தியாசமான கேரக்டரில் பார்க்க விரும்புபவர்களுக்கு நிச்சயம் சந்தோஷமான விஷயமாக இருக்கும்.

குசேலன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் மார்ச் 7ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது. மார்ச் 14ம் தேதி ரஜினி ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X