நடிகர் சங்க தேர்தலில் போட்டி இல்லை: சரத்

வேறு பாதையில் போகத் தொடங்கி விட்டேன். இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய முடியாது. எனவே நடிகர் சங்கத் தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன் என நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த நாடக, நடிகர் சங்க 64-வது ஆண்டு விழா நடந்தது. இதற்கு சரத்குமார் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
நான் தற்போது வேறு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறேன். நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, பளு அதிகமாகி விட்டது.
ஒரே நேரத்தில் 2 குதிரைகளில் பயணம் செய்ய முடியாது. எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என யாரும் என்னை வற்புறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் சரத்.


Click it and Unblock the Notifications











