Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிகர் சங்க தேர்தலில் போட்டி இல்லை: சரத்
வேறு பாதையில் போகத் தொடங்கி விட்டேன். இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய முடியாது. எனவே நடிகர் சங்கத் தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன் என நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த நாடக, நடிகர் சங்க 64-வது ஆண்டு விழா நடந்தது. இதற்கு சரத்குமார் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
நான் தற்போது வேறு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறேன். நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, பளு அதிகமாகி விட்டது.
ஒரே நேரத்தில் 2 குதிரைகளில் பயணம் செய்ய முடியாது. எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என யாரும் என்னை வற்புறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் சரத்.