Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் சங்க தேர்தலில் போட்டி இல்லை: சரத்
வேறு பாதையில் போகத் தொடங்கி விட்டேன். இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய முடியாது. எனவே நடிகர் சங்கத் தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன் என நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த நாடக, நடிகர் சங்க 64-வது ஆண்டு விழா நடந்தது. இதற்கு சரத்குமார் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
நான் தற்போது வேறு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறேன். நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, பளு அதிகமாகி விட்டது.
ஒரே நேரத்தில் 2 குதிரைகளில் பயணம் செய்ய முடியாது. எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என யாரும் என்னை வற்புறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் சரத்.