Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபாகரன் தலைப்பை மாற்றும் விஷால்!
தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தனது படத்துக்கு வைக்கப்பட்ட பிரபாகரன் என்ற தலைப்பை மாற்றுகிறார் நடிகர் விஷால்.
பிரபு தேவா இயக்கத்தில் நடிகர் விஷால் 'பிரபாகரன்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.
பிரபாகரன் என்ற பெயர் தமிழ் சமூகத்தின் தேசிய அடையாளமாகப் பார்க்கப்படுவதால், அந்தப் பெயரை ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு வைக்கக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த தலைப்பு மாற்றப்படுவதாக விஷால் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் விஷால் வியாழக்கிழமை கூறுகையில், "பிரபாகரன் படத்தில் நான் உதவி கமிஷனர் வேடத்தில் வருகிறேன். என் கேரக்டர் பெயர் பிரபாகரன். அதையே தலைப்பாக்க நினைத்தோம். அது சர்ச்சையாகி இருப்பதால் ரசிகர்கள் மனநிலை வியாபாரம், மக்கள் உணர்வுகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு வேறு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அவன் இவன் படம் வெற்றிகரமாக ஓடி லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது. தெலுங்கில் இந்தப் படம் நல்ல வெற்றியைத் தந்துள்ளது.
இப்படத்தில் ஒன்றரைக் கண்ணனாக கஷ்டப்பட்டு நடித்தேன். கண்களில் வலி இருந்தது. பாலாவிடம் சொன்னால் படப்பிடிப்பை நிறுத்தி விடுவார் என பயந்து சிரமங்களை பொறுத்துக்கொண்டு நடித்தேன். அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒன்றரைக் கண் பாவத்தோடு யாரும் இதுவரை நடித்தது இல்லை. எனவே கின்னஸ் சாதனைக்கு இப்படத்தை அனுப்ப முயற்சி நடக்கிறது.
இயக்குனர் பாலா கதாநாயகர்களை அடிமைபோல் நடத்துவார் என்றும் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கதை சொல்ல மாட்டார் என்றும் பேசப்படுவதில் உண்மை இல்லை. என்னிடம் முழு கதையும் சொன்னார்.
அவர் படத்தில் நடிக்க ஒவ்வொரு நடிகரும் கனவு காண்கிறார்கள் என்பதே உண்மை. நானே அவரிடம் 'நீங்கள் வெளியில் அதிகம் பேசாததால் சைக்கோ என்கிறார்கள். எனவே எல்லோரிடமும் சகஜமாக பேசுங்கள்' என்று சொல்லி ஒரு கூட்டத்தில் வலுக் கட்டாயமாக இழுத்து போய் உட்கார வைத்தேன்.
தனது உழைப்பு, திறமையை தியாகம் செய்து எனக்கு அவன் இவன் படத்தில் பெயர் கிடைக்கச் செய்துள்ளார். தேசிய விருது பெறுவதில் விக்ரமுக்கும் எனக்கும் போட்டி என்கிறார்கள். நான் அப்படியெல்லாம் எந்த நினைப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.
விருது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. இன்னும் பல படங்கள் ரிலீஸாக உள்ளன. அவன் இவன் படத்துக்கு விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.