Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
அரசியல் ஒரு கடல், இறங்குவது சுலபமல்ல: விஜய்
வில்லு படம் திரையிட்ட திரையரங்குகளுக்குச் சென்று, ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
அதன் ஒரு பகுதியாக மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் நடித்த திரைப்படங்களில், திரையிட்ட 10 நாட்களில் வில்லு படத்திற்குத் தான் அதிக வசூல் கிடைத்துள்ளது. இப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது உணர்வை வெளிப்படுத்துவதற்காக, நான் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தேன். மக்களுக்கு நற்பணி செய்வதும், சமூக உண்ர்வுடன் உண்ணாவிரதம் இருப்பதும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல.
நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்பது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் விருப்பம். சேவையுள்ளம் கொண்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
அரசியல் என்பது கடல் போன்றது. அதில் எவர் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால் அதில் இறங்குவது அவ்வளவு சுலபமல்ல. எனக்கு இப்போது அரசியல் பிரவேச ஆசையெல்லாம் கிடையாது என்றார் விஜய்.