சௌந்தர்யா திருமணம்: முதல்வருக்கு நேரில் அழைப்பு வைத்த ரஜினி

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் தனது ஆக்கர் ஸ்டூடியோ மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். இவரும் தொழிலதிபர் மகன் அஸ்வினும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலை ஏற்றுக் கொண்டார் ரஜினி. மணமகன் வீட்டாருக்கும் இதில் முழு சம்மதம். சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு வாழ்த்தினார்.
இப்போது வரும் செப்டம்பர் மாதம் 3ம் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
இந்தத் திருமணத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர், பாஜக தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்துள்ளார் ரஜினி.
இந்த நிலையில், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ரஜினி. சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த் முதல்வரிடம் கொடுத்தார்.
அரசியல் மற்றும் இதர திரையுலகப் பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ்களை தானே முன்னின்று கொடுத்துவருகிறார் ரஜினி.
நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். ரஜினிக்கு நெருக்கமான ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும் திருமணத்துக்கு வருகிறார்.


Click it and Unblock the Notifications











