twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

    By Siva
    |

    Rajinikanth
    சென்னை: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களில் ஒரு பிரிவினர் இன்று நடத்தும் உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அன்னா தான் என் ஹீரோ என்று அறிக்கை ரஜினி வெளியிட்டுள்ளார்.

    ஊழலுக்கு எதிரான அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதனால் ரஜினி எப்பொழுது வருவார் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினி வரவில்லை. மாறாக அவர் அன்னாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது,

    இந்திய சமுதாயத்தில் இன்று ஊழல் ஒரு கடும் நோய் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வரும் அன்னா குழுவினரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஊழலுக்கு எதிராகப் போராட அன்னா ஹஸாரே என்னும் திறமையான தலைவர் கிடைத்துள்ளதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஜன் லோக்பால் நாடாளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக் கொண்டுள்ள இந்த பணியினை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.

    ரத்தமில்லாத இந்த புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் எல்லா இந்தியர்களையும் நான் பாராட்டுகிறேன். சத்யாகிரகம் பிறந்த இந்தியாவில் தான் இது போன்ற அமைதியான இயக்கங்கள் செயல்பட முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    Superstar Rajinikanth has not joined Kollywood team's fasting in support of Anna Hazare. But he has released a statement saying Anna Hazare as his hero. Rajinikanth has congratulated Anna's supporters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X