Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
ஊழலுக்கு எதிரான அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதனால் ரஜினி எப்பொழுது வருவார் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினி வரவில்லை. மாறாக அவர் அன்னாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது,
இந்திய சமுதாயத்தில் இன்று ஊழல் ஒரு கடும் நோய் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வரும் அன்னா குழுவினரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஊழலுக்கு எதிராகப் போராட அன்னா ஹஸாரே என்னும் திறமையான தலைவர் கிடைத்துள்ளதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஜன் லோக்பால் நாடாளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக் கொண்டுள்ள இந்த பணியினை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.
ரத்தமில்லாத இந்த புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் எல்லா இந்தியர்களையும் நான் பாராட்டுகிறேன். சத்யாகிரகம் பிறந்த இந்தியாவில் தான் இது போன்ற அமைதியான இயக்கங்கள் செயல்பட முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.