Don't Miss!
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மராத்தியில் படம் எடுக்கும் அமிதாப்
ஏபி கார்ப்பரேஷன் என்ற தனது சொந்த பேனரில் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார் அமிதாப் பச்சன். மராத்தி மொழி மீது தனக்குள்ள பாசத்தை, அன்பை வெளிப்படுத்தும் வகையில் மராத்தியில் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் அமிதாப்.
உமேஷ் குல்கர்னி இப்படத்தை இயக்குவார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதுகுறித்து உமேஷ் கூறுகையில், நான் இந்திய திரைப்பட கல்லூரியில் படித்தபோது ஜெயா பச்சன் எனக்கு சீனீயர். திரைப்படக் கல்லூரியில் படித்தபோதூ நான் இயக்கிய கிர்னி என்ற படத்தை அவர் பார்த்து பெரிதும் பாராட்டியிருந்தார். சமீபத்தில் நான் இயக்கிய வாலு என்ற படமும் அவரைக் கவர்ந்து விட்டது.
இதையடுத்து தனது பேனரில் புதிய படம் இயக்க எனக்கு அழைப்பு விடுத்தார். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இப்படத்தை மராத்தியில் இயக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம் என்றார்.
இப்படத்தின் கதை 12 வயது சிறுவனின் கதையாம். அதேசமயம் குழந்தைளுக்கான படமாக இது இருக்காது என்றும் கூறுகிறார் குல்கர்னி.
ஆகஸ்ட்-செப்டம்பரில் படத்தை ஆரம்பித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம். நடிக, நடிகையர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. புனே மற்றும் மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளில் படப்பிடிப்பு இருக்குமாம்.