Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மராத்தியில் படம் எடுக்கும் அமிதாப்
ஏபி கார்ப்பரேஷன் என்ற தனது சொந்த பேனரில் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார் அமிதாப் பச்சன். மராத்தி மொழி மீது தனக்குள்ள பாசத்தை, அன்பை வெளிப்படுத்தும் வகையில் மராத்தியில் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் அமிதாப்.
உமேஷ் குல்கர்னி இப்படத்தை இயக்குவார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதுகுறித்து உமேஷ் கூறுகையில், நான் இந்திய திரைப்பட கல்லூரியில் படித்தபோது ஜெயா பச்சன் எனக்கு சீனீயர். திரைப்படக் கல்லூரியில் படித்தபோதூ நான் இயக்கிய கிர்னி என்ற படத்தை அவர் பார்த்து பெரிதும் பாராட்டியிருந்தார். சமீபத்தில் நான் இயக்கிய வாலு என்ற படமும் அவரைக் கவர்ந்து விட்டது.
இதையடுத்து தனது பேனரில் புதிய படம் இயக்க எனக்கு அழைப்பு விடுத்தார். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இப்படத்தை மராத்தியில் இயக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம் என்றார்.
இப்படத்தின் கதை 12 வயது சிறுவனின் கதையாம். அதேசமயம் குழந்தைளுக்கான படமாக இது இருக்காது என்றும் கூறுகிறார் குல்கர்னி.
ஆகஸ்ட்-செப்டம்பரில் படத்தை ஆரம்பித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம். நடிக, நடிகையர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. புனே மற்றும் மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளில் படப்பிடிப்பு இருக்குமாம்.