Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே எந்திரன் டிக்கெட் விற்பனை-ரஜினி வேண்டுகோள்!
அதனால்தானோ என்னமோ, சில விஷயங்களில் தனக்கு எதிராக விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் கூட, மனதில் பட்டதை பளிச்சென்று வெளிக்காட்டும் விதமாய் முடிவெடுப்பார்.
குசேலன் படத்தை குறைந்த விலைக்குத்தான் விற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதை சாய்மிராவும் பாலச்சந்தரும் புறக்கணித்ததால் எத்தனை மோசமான பின் விளைவுகளை ரஜினி சந்திக்க வேண்டி வந்தது!
எந்திரன் வெளியாகும் இந்தத் தருணத்தில், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்... "அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் விலையை மட்டுமே வசூலிக்க வேண்டும், கூடுதல் விலை வைத்து விற்க வேண்டாம்...," என்பதுதான்.
இதனை வாய் மொழி வேண்டுகோளாகவே ரஜினி முன்வைத்துள்ளார். சென்னையைப் பொறுத்தவரை, இதுவரை டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ள திரையரங்குகள் அரசு நிர்ணயித்துள்ள ரூ 100 மற்றும் 120 -ஐ மட்டுமே பெற்றுக் கொண்டு முன்பதிவு கூப்பனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான பிறகும் இந்த நிலை தொடர்ந்தால், அநாவசிய விமர்சனங்களைத் தவிர்க்கலாம். மற்ற தியேட்டர்காரர்கள் ரஜினியின் அட்வைஸைக் கேட்பார்களா... அல்லது கூடும் கூட்டத்தைப் பார்த்து மனசு மாறி இஷ்டத்துக்கும் ஏற்றி விடுவார்களா... பார்க்கலாம்!