Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என் கணவர் மீது பொய் நில அபகரிப்பு புகார்: நடிகர் விக்னேஷ் மனைவி மனு
கடந்த 22-ம் தேதி ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த வீரம்மாள் என்ற 80 வயது மூதாட்டி நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார். அந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து விக்னேஷின் மனைவி உமா மகேஸ்வரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஆலந்தூரில் திருவிக இன்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட் என்ற பெயரில், எனக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை எனது அம்மா சுதா எனக்கு எழுதி வைத்தார்.
இந்நிலையில் வீரம்மாள் என்பவர் என் மீதும், எனது கணவர் விக்னேஷ் மீதும் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார். இந்த இடம் வீரம்மாளின் மூத்த மகனான சின்னதம்பிக்கு சொந்தமானது. கடந்த 2001-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார்.
பல்வேறு வங்கிகளில் சின்னதம்பி கடன் வாங்கியிருந்தார். இதனை அடைக்க முடியாமல் அவரது மனைவி கீதா கஷ்டப்பட்டார்.
இந்நிலையில் கீதாவின் அக்காள் என்ற முறையில் எனது தாய் சுதா அக்கடன்களை அடைத்தார். இதற்கு பிரதிபலனாக அந்த சொத்தை கீதாவும், அவரது மகன்களும் சேர்ந்து எனது தாயின் பெயருக்கு எழுதி வைத்தனர்.
இந்த சொத்தை எனது தாய் என் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். இந்த சொத்து சம்பந்தமாக எனக்கும், வீரம்மாளுக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வீரம்மாளும், அவரது மகன்களான ராஜு, தங்கராஜ் ஆகியோர் சொத்து தொடர்பாக புகார் அளித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். எனது கணவர் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீரம்மாள் மற்றும் அவரது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!