Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கமல்ஹாசனின் 'ஹ்ருதயராகம்'
125 இளம் சிறார்களின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக, உலக மலையாளிகள் கவுன்சில் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை மாகாண உலக மலையாளிகள் கவுன்சில், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, மலையாள மனோரமா ஆகியவை இணைந்து 125 இளம் சிறார்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சையை நடத்தவுள்ளன. இதற்குத் தேவையான நிதியை இசை நிகழ்ச்சி மூலம் வசூலிக்க முடிவு செய்தன.
இந்தத் திட்டத்திற்கு ஹ்ருதயராகம் -2008 என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இதன் திட்ட தூதராக செயல்படுகிறார். தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிதி திரட்டித் தரவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ஷோபா ஹ்ருதயராகம் -2008 இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த இன்னிசை இரவு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மலையாளத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பங்கேற்றனர். வித்யாசாகர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடியது அமைந்தது. எந்தவித முன்னேற்பாடும், தயார் நிலையும் செய்து கொள்ளாமல் கேஷுவலாக மைக்கைப் பிடித்த கமல், பாடத் தொடங்கினார்.
அவர் பாடத் தொடங்கியபோது கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று இடைவிடாமல் கைதட்டி கமல்ஹாசனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனால் உற்சாகமான கமல், தனது பழைய பாடல் நினைவுகளில் மூழ்கினார்.
'நினைவோ ஒரு பறவை' என்ற பழைய, இனிய பாடலை பாடி கூட்டத்தினரை மகிழ்வித்தார்.
அதே குரலில், அதே இனிமையுடன் கமல் பாடியதைப் பார்த்து கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் ரசித்தனர்.
மலையாள இசையமைப்பாளர்கள் நடத்திய அடிபொலி கச்சேரியும் கூட்டத்தினரை மகிழ்வித்தது. ஆயிரக்கணக்கான மலையாளிகள் இந்த இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் வசூலான ரூ. 75 லட்சத்திற்கான காசோலையை கமல்ஹாசன், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை இயக்குநர்களான டாக்டர் ஜான், தாமஸ், வர்கீஸ் ஈப்பனிடம் வழங்கினார். மலையாள மனோரமாவின் லால் ஜோஹன், உலக மலையாளிகள் கவுன்சிலைச் சேர்ந்த பிரவீன், அச்சுதன், அனூப், ஸ்ரீதர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!