Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விக்ரம் தொடங்கிய சினிமா நிறுவனம்!
இதோ அதன் பாலோ அப்:
தனது பட நிறுவனத்துக்கு விக்ரம் 'ரீல் லைப்' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படம் குறித்து விக்ரம் இப்படிக் கூறுகிறார்...
சசிகுமாருக்கும் எனக்கும் பல ஆண்டுகால நட்பு. சேதுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோதே அவரை எனக்கு நல்ல பழக்கம். அவரது முதல் படத்தை நான்தான் நியாயமாகத் தயாரித்திருக்க வேண்டும். ஆனால் அப்போது பிடிவாதமாக தானே தயாரிப்பதாகவும், இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாம் இணையலாம் என்றும் அவர் கூறிவி்ட்டார். ஆனால், சுப்பிரமணியபுரம் பட ட்ரெய்லர் பாத்ததுமே சொல்லிட்டேன், இது ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும்னு.
அன்றைக்கே, ஒரு தயாரிப்பாளராக எனது முதல் படத்தின் இயக்குநர் சசிகுமார்தான் என முடிவு செய்து அவரிடம் சொல்லிவிட்டேன்.
எனக்கு அளித்த வாக்கின்படி, தனது இரண்டாவது படத்தை எனக்காக இயக்கித் தருகிறார் சசி, என்றார்.
ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது.
இந்தப் படத்தில் விக்ரமும் நடிக்கவில்லை, சசிகுமாரும் நடிக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.