twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மங்காத்தா... ஒருவழியாக ஆட்டத்தைத் துவக்கினார் அஜீத்!

    By Chakra
    |

    'விளையாட்டில் நானும் இருக்கேன்... ஆனா வேடிக்கை மட்டும்தான் பார்ப்பேன்' என்று கொஞ்ச காலம் அடம்பிடித்து வந்தார் அஜீத்.

    அவரது ரசிகர்களுக்கோ, 'நம்ம தல சும்மா இருக்கப் போய், நேற்று முளைத்தவர்களையெல்லாம் மீடியா 'புது சூப்பர் ஸ்டார்' என அழைத்து வெறுப்பேற்றுறார்களே என்ற ஆற்றாமையில் தவித்தார்கள்.

    ஒருவழியாக வேடிக்கை மூடிலிருந்து வேக மூடுக்கு மாறி, இதோ களத்திலும் இறங்கிவிட்டார் அஜீத்.

    "மங்காத்தா" படப்பிடிப்பு சென்னையில் நேற்று திட்டமிட்டபடி தொடங்கியது. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி பட்டையைக் கிளப்பும் வகையில் ரீலீஸ் பண்ணுகிறார்களாம்.

    தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து கிராண்ட் ஓபனிங்க் உள்ள நடிகர் என்றால் அது அஜீத்தான். எனவே, இந்தப் படத்தை உலக அளவில் 1000 பிரதிகளுக்கும் மேல் வெளியிடத் திட்டமிட்டு இப்போதே வேலைகளைத் துவங்கியுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. முன்பு போல ஒதுங்கி நில்லாமல், படத்தின் உருவாக்கம், வெளியீடு என அனைத்திலுமே கவனம் செலுத்துகிறார் அஜீத்.

    இந்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அவர் கூறும்போது, அஜீத் என்னை அழைத்து துள்ளலாக இசையமைக்க கேட்டுக் கொண்டார். முந்தைய படங்களை விட அதிக கவனம் எடுத்து பாடல்களை உருவாக்குகிறேன், என்றார்.

    வெங்கட்பிரபு கூறும்போது, "மங்காத்தா ஒரு வித்தியாசமான ஆட்டமாக இருக்கும் ரசிகர்களுக்கு. ஒவ்வொரு காட்சியும் புதிய பாணியில், சீட் நுனியில் உட்கார வைக்கும்" என்றார்.

    அஜீத்துக்கு இது 50வது படம்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X