பாலிவுட் ஆசையில் அசோக்!
முருகா, பிடிச்சிருக்கு என இரு படங்களில் (மட்டுமே) நடித்துள்ள அசோக் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால் விரக்தியாகி விட்டார். பேசாமல் இந்திக்குப் போகப் போகிறேன் என்கிறார்.
தமிழில் இனிமேல் புதிய வாய்ப்புகள் வரும் வழியையும் காணோம், அசோக்கும் தேடுவதாக இல்லையாம். இந்தியில் தனது அதிர்ஷ்டத்தைப் பரிட்சீத்துப் பார்க்கப் போகிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தென்னகத் திரையுலகில் எல்லோருக்கும் நான் தெரிந்த பெயர். ஆனால் மும்பைதான் எனது வீடு. எனக்கு எல்லாமே அங்குதான் கிடைத்தது. ஒரு நடிகராக தேவையான அனைத்துத் தகுதிகளையும் நான் அங்குதான் வளர்த்துக் கொண்டேன்.
தமிழ்ப் படங்கள் எனக்கு நல்ல வாய்ப்புகளைத் தந்தன. அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் எனது இதயமெல்லாம் மும்பையில்தான் உள்ளது என்கிறார் அசோக்.
விட்டலாச்சாரியா படம் போல இதயத்தை பாம்பேயில் வைத்து இவர் மட்டும் சென்னையில் உலா வருகிறார் போலும்.. பேசாம இரண்டையும் சேர்த்து ஒரே இடத்தில் வைங்க அசோக், புண்ணியமாகப் போகும்.


Click it and Unblock the Notifications











