Don't Miss!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கடவுள் அவதாரமெடுக்கும் தனுஷ்!
மலையாள பட உலகின் வெற்றிப் பட இயக்குநர்களில் ஒருவர் ரஞ்சித். சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்துள்ள திரைக்தா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன்- ஸ்ரீவித்யா காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.
பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இவர் எடுக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏற்கெனவே இந்தப் பாணியில் இவர் எடுத்த படங்கள்தான் நந்தனம் மற்றும் ராவணபிரபு.
இதில் நந்தனம் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ரஞ்சித். மலையாளத்தில் பிருத்விராஜூம், நவ்யா நாயரும் ஜோடியாக அறிமுகமான முதல்படம் இது. ஷோகன் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
தமிழ்ப் படத்திலும் பிருத்விராஜே நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ப்ரியாமணி.
இந்தப் படத்தில் விசேஷம் தனுஷ் கெளரவ வேடத்தில் நடிப்பதுதான். காதலர்களைச் சேர்த்து வைக்கும் கடவுளாக வருகிறார் இந்தப் படத்தில் தனுஷ்.
இந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்ட தனுஷ், இயக்குநர் தன்னை அந்த வேடத்துக்கு அழைத்ததும் ஒப்புக் கொண்டாராம்.