Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜாக்கிசானின் நல்ல உள்ளம்.. கமல் சிலாகிப்பு
சென்னையில் ஜாக்கி சான் பங்கேற்ற தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் பேசியதாவது:
பழகிய சில நிமிடங்களிலேயே ஜாக்கிசான் என் நண்பர் என்று சொல்லும் தைரியத்தை அவர் எனக்கு கொடுத்து விட்டார். ஒரே பிரசவத்தில் பத்து பிள்ளைகள் பெற்ற பிள்ளையை பார்த்து குதூகலிக்கிற தாயை போன்றவர் முதல்வர் கலைஞர். அவருடைய பாராட்டுகள், எனக்கு பல்சுவை விருந்து போல் இருந்தது.
கே.எஸ்.ரவிகுமாரை சிகரத்தில் தூக்கி வைக்கும் படமாக தசாவதாரம் அமையும்.
இந்த படத்தை பற்றிய செய்திகளை இரண்டு வருட காலமாக இருட்டடிப்பு செய்தோம். இனி, அவைகள் ஒவ்வொன்றாக வெளிவரும். படத்தை பற்றிய சுவாரஸ்யங்கள் குறையக்கூடாது என்பதற்காகத்தான், செய்திகளை பதுக்கி வைத்தோம்.
தசாவதாரம் படத்தின் சில காட்சிகளை கலைஞர் பார்த்துவிட்டு பாராட்டினார். நான் இந்த படத்துக்காக உழைத்த உழைப்பில் ஏற்பட்ட அசதிகளை எல்லாம் அவருடைய பாராட்டு ஆனந்தமாக மாற்றிவிட்டது.
நாம் இனிமேல் கைகோர்த்தபடி நடக்கலாம் என்று கூறியதன் மூலம் ஜாக்கிசானின் நல்ல உள்ளம் புரிந்தது. அவருடைய எளிமை என்னை கவர்ந்தது. அவருடைய மனிதநேயம் என்னை கவர்ந்தது. இன்று முதல் எங்கள் நட்பு தொடரும் என்றார் கமல்.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், நடிகைகள் ஹேமாமாலினி, ஜெயப்பிரதா, மல்லிகா ஷெராவத், ஆசின், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை நடிகை ஷோபனா தொகுத்து வழங்கினார்.