Don't Miss!
- News ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இந்தூரில் சல்மான் கான் ரசிகர்கள் பெரும் ரகளை
இந்தூரில், உள்ள நேரு ஸ்டேடியத்தில் சல்மான் கான் கலந்து கொள்ளும் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து சல்மானின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
ஆனால் ஐந்து மணி நேரம் தாமதமாக வந்தார் சல்மான். லேட்டானாலும் விளையாடிக் கலக்குவாரே என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் மனம் தளராமல் காத்திருந்தனர்.
சல்மான் கான் வந்ததும், ஸ்டேடியத்தை நிறைத்திருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். அதன் பின்னர் டாடா காட்ட விட்டு கிளம்பிப் போய் விட்டார்.
சல்மான் கான் ஆடுவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இதனால் பெரும் ஏமாற்றமடைந்தது. அது கோபமாக மாறி ஸ்டேடியத்தில் இருந்த இருக்கைகளைத் தூக்கிப் போட்டு பந்தாடி விட்டனர்.
இதையடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சிம்லா கிளப் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தது. போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது அனைவரும் திமுதிமுவென ஓடியதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்தூர் சல்மான் கான் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.