Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
தமிழுக்கு வரும் ராணா!
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் டி.ராமா நாயுடுவின் பேரன் ராணா. வெங்கடேஷின் உறவினர். ராணாவின் தந்தை சுரேஷும் பெரிய தயாரிப்பாளர். சமீபத்தில் ராணா நடித்து வெளியான லீடர் பெரும் வெற்றி பெற்றது.
இப்போது, ராணாவை தமிழுக்குக் கொண்டு வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது.
இந்தப் படத்துக்காக செல்வராகவனுக்கு பெரும் தொகை அட்வான்ஸாக தரப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. இப்போது அதை மறுத்துள்ள செல்வராகவன், ஒரு புதுமுக நடிகையை நாயகியாக அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் விக்ரமின் படத்தை முடித்த கையோடு, இந்தப் புதிய படத்தில் மும்முரமாக இறங்குகிறார் செல்வா.
இதுகுறித்து ராணா கூறுகையில், "தமிழில் ஒரு நேரடிப் படம் நடிப்பதே த்ரில்லாக உள்ளது. செல்வா மீது எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது..." என்றார்.
ஏற்கெனவே வெங்டேஷ் நடித்த ஒரு சூப்பர் ஹிட் படத்தை தெலுங்கில் தந்தவர் செல்வராகவன் என்பது நினைவிருக்கலாம்.