twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார் விபத்து வழக்கு: இப்படி போய் இப்படி வந்த டிவி நடிகர்

    By Siva
    |

    Ronit Roy
    இந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ரோனித் ராய் தாறுமாறாக கார் ஓட்டி இன்னொரு காரை இடித்தது தள்ளிவிட்டு தப்பியோடிவிட்ட வழக்கில் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை செலுத்துமாறு கூறி அவருக்கு பந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    இந்தி சீரியல்களில் நடிப்பவர் ரோனித் ராய். கியூன்கி சாஸ் பி கபி பஹு தி, பந்தினி மற்றும் அதாலத் போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மும்பையின் அம்போலி பகுதியில் தனது மெர்சிடீஸ் காரில் வேகமாக சென்று இன்னொரு காரை இடித்து தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் 56 வயது பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் ரோனித் ராயை கைது செய்தனர். அவரை மும்பையில் உள்ள பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பந்த்ரா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது அதுவும் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளது.

    அதிகாலையில் விபத்து ஏற்படுத்தி காலையில் கைதாகி சிறிது நேரத்தில் இப்படி போய் இப்படி வெளியே வந்துவிட்டார்.

    English summary
    Television actor Ronit Roy, who was arrested in a rash driving and accident case, has been granted bail by Bandra court in Mumbai. Mr Roy has been asked to pay Rs 12,000 as the surety. Three people were seriously injured. Police arrested Mr Roy over a hit-and-run case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X