Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரசிகர்கள் ரகளை: மம்முட்டியின் துபாய் கலை நிகழ்ச்சி ரத்து!
துபாய் விமான நிலைய கண்காட்சி திடலில், மலையாள நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒரு மலையாள டி.வி. சேனல் ஏற்பாடு செய்திருந்தது.
தங்கள் அபிமான நடிகரான மம்முட்டியை பார்ப்பதற்காக, துபாயில் வசிக்கும் ஏராளமான கேரள ரசிகர்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சி நடந்த மைதானத்தில் 7 ஆயிரத்து 500 பேர் மட்டுமே இருக்க முடியும். ஆனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்து விட்டனர். டிக்கெட் எடுக்காதவர்களும் கூட, மைதானத்துக்குள் நுழைய முயற்சித்தனர். அதே நேரத்தில், 70 தனியார் பாதுகாவலர்கள் மட்டுமே நுழைவு வாயில்களில் இருந்தனர்.
ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து அமளியும், கலாட்டாவும் ஏற்பட்டதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதில், ஏராளமான ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த அமளியால், நடிகர் மம்முட்டி கலை நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக மலையாள டி.வி. சேனலின் நிர்வாக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துக் கொண்டனர். துபாயில் ஒரு கலைநிகழ்ச்சியில் இந்த அளவு வன்முறை வெடித்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது இதுவே முதல் முறை.