Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனிமையான தனிமை-சல்மான்
தனிமையின் இனிமை குறித்து தனது பிளாக்கில் சல்மான் கான் இப்படிக் கூறியுள்ளார்...
தனிமையில் உருவாவதுதான் கலை. அப்படி உருவாகும் கலைதான் மக்களிடம் வைக்கப்படுகிறது. இதுபோன்ற தனிமையான தருணங்கள்தான், என்னைப் போன்ற திரைப்பட கலைஞர்களுக்கு நிறைய யோசிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. சுய ஆய்வுக்கும் தனிமை மிகவும் அவசியமானது, அற்புதமானது.
ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல், நல்ல மனிதர்களாகவும் நாம் மாற தனிமை மிகவும் அவசியம். என்னைப் போன்ற திரைப்படக் கலைஞர்களுக்கு எப்போதுமே ஒரு கூட்டம் கூடவே இருக்கும். பிசியான ஷெட்யூல்களுக்கு இடையில் நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கும்போது கிடைக்கிற சிறிது நேர தனிமை கூட மிகப் பெரிய விஷயமாகும்.
எனது தந்தையும், சிறந்த கதாசிரியருமான சலீம் கான் ஒருமுறை என்னிடம் கூறினார், ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் தனிமைதான் அவனை மேலும் சிறந்த மனிதனாக்க உதவுகிறது. அவனது திறமைகள், கிரியேட்டிவிட்டி ஆகியவற்றை வெளிக் கொணர உதவுகிறது என்றார்.
அமீர்கான் கூட எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் அந்த தனிமையான நேரங்கள்தான் எனது வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் என்று கூறியுள்ளார் ...
இப்படிப் போகிறது சல்மான் கானின் தனிமை புராணம். வர வர சல்மான் தத்துவமானாகி வருகிறார்!.