Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'குட்டி'க்கு ஒத்துழைக்க மறுப்பா?-தனுஷ் விளக்கம்
ஒவ்வொரு பட வெளியீட்டுக்கு முன்னும் திருப்பதி போய் ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வருவது ரஜினி வழக்கம்.
இப்போது அதை அப்படியே பின்பற்றத் துவங்கியுள்ளார் அவரது மருமகன் தனுஷும்.
பொங்கலுக்கு அவர் நடித்த குட்டி திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படம் வெளியாவதையொட்டி ஏழுமலையானைத் தரிசிக்க நேற்று திருப்பதி போனார் தனுஷ்.
மனைவி ஐஸ்வர்யா, மகன் யாத்ராவுடன் அவர் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானுக்கு நடந்த சிறப்புப் பூஜையில் அவர்கள் கலந்து கொண்டனர்.
'குட்டி'க்கு ஒத்துழைக்க மறுப்பா?
இதற்கிடையே, குட்டி படம் வெளியாவதற்கு தான் முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்துள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பிரஸ் மீட் மற்றும் ஆடியோ வெளியீடு எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார் தனுஷ்.
இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "குட்டி என் படம். அதற்கு நான் எப்படி ஒத்துழைக்காமல் இருப்பேன்... இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. பெரிய வெற்றியைப் பெறும்" என்றார் தனுஷ்.