Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மணிரத்னம் படம்... மகேஷ் பாபு ஒப்பந்தம்!
விஜய், விக்ரம் மற்றும் விஷாலை இணைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளார் மணிரத்னம். கல்கியின் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிப்பதை விஜய்யும் விக்ரமும் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்போது மகேஷ் பாபுவை இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.
இதுகுறித்து மகேஷ்பாபு தனது ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்-
"மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இப்போது அந்தக் கனவு நிறைவேறப்போகிறது. வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக இதை உணர்கிறேன்", என்று கூறியுள்ளார் மகேஷ் பாபு.
இதற்கிடையே, மகேஷ் பாபுவுக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கும் தொடர்பில்லை என்றும், இந்தப் படம் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படம் என்றும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்று மணிரத்னம் சொல்வாரா...?