திருச்செந்தூரில் ரஜினிக்காக தங்கத் தேரிழுத்த ரசிகர்கள்

By Siva

Rajinikanth
திருச்செந்தூர்: உடல் நலம் பாதி்க்கப்பட்டு குணமடைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழையபடி படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் திருச்செந்தூர் கோயிலில் தங்கத் தேர் இழுத்தனர்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி. நோய்த் தொற்று பரவாமல் இருக்க அவரைச் சந்திக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அவர் இப்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டாலும், பழைய உடல் வலுவைப் பெற 15 தினங்களாவது ஆகும் என்கிறார்கள். அதன் பிறகு பார்வையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார்.

அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்தே அவர் பூரண குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அவர் விரைவில் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக திருநெல்வேலி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் ஏ எம் ஸ்டாலின் தலைமையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ரசிகர்கள் தங்கத் தேர் இழுத்து பிரார்த்தனை செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் டக்ளஸ், மாவட்ட பொருளாளர் லட்சுமண ராஜா உள்பட திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X