Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தனியா நடிச்சா இனி கூட்டம் வராது!-சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தமிழ் படங்களில் நடிப்பதுடன், சமீபகாலமாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தமிழிலும் பிற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார். அதன் முதல் கட்டமாக, மதுமிதா இயக்கத்தில் உருவான 'கொல கொலயா முந்திரிக்கா' என்ற படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் சரத்குமார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சியின்போது வந்திருந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
பொதுவா தமிழ்ல ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோ கூட சேர்ந்து நடிப்பதில்லை. ஆனால் மும்பையில் அப்படியில்லை. அங்கே ஓரிரு காட்சியில் நடிக்கக் கூட பெரிய நடிகர்கள் தயங்குவதில்லை.
இந்த நிலை இனி தமிழிலும் வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை இனி தனி ஹீரோவா நடிச்சு ரசிகர்களை தியேட்டருக்குள் கொண்டு வரமுடியாது. இரண்டு அல்லது மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிச்சாதான் மக்கள் அதிகமாக தியேட்டருக்குள் வருவார்கள்.தமிழிலும் அந்த நிலை வரும் என்று நம்புகிறேன் என்றார்.