Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஸ்ரீகாந்த் பிசி, பிசி!
வந்தனாவுடன் சந்தோஷ சம்சார சாகரத்தில் மூழ்கியிருக்கும் ஸ்ரீகாந்த் கைவசம் இப்போது நிறையப் படங்களாம். தமிழில் தனக்கு பெரும் வாழ்வு அளித்த சசியின் இயக்கத்தில் பூ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
சசியின் ரோஜாக்கூட்டம்தான், ஸ்ரீகாந்த்தின் முதல் தமிழ்ப் படம். அதுவரை தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த், ரோஜாக்கூட்டம் மூலம் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார்.
இப்போது கல்யாணத்திற்குப் பின்னர் பெரிய பிரேக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த்துக்கு பூ படம் மூலம் இன்னொரு பிரேக் கிடைக்கும் என பூ வட்டாரமே பூரிப்புடன் கூறுகிறது.
தற்போது பூ பட ஷூட்டிங்குக்காக ராஜபாளையம் அருகே முகாமிட்டுள்ள ஸ்ரீகாந்த், இப்படம் எனக்கு பெரும் திருப்புமுனையைக் கொடுக்கும். இந்தப் படத்துக்காக 8 மாத கால டைம் எடுத்துக் கொண்டார் சசி. பார்த்து பார்த்து ஒவ்வொரு காட்சியையும் அவர் எடுத்து வருகிறார். ஒவ்வொரு காட்சியும் எப்படி அமையும் என்பதை நன்றாக திட்டமிட்டு செய்கிறார். எனவே இந்த பூ, ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்கிறார் நம்பிக்கையுடன்.
இதேபோல எட்டப்பன் படமும் தனக்கு நல்ல பெயரைத் தரும் என்கிறார் ஸ்ரீகாந்த். இப்படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக மலையாளத்து பார்வதி மெல்டன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து இந்திரவிழி என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஸ்ரீகாந்த். இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.
இப்படம் இன்னொருவருக்கு கம் பேக் மூவி ஆக இருக்கிறது. அவர் இயக்குநர் டி.வி. ராஜேஷ்வர். கார்த்திக்குக்கு பிரேக் கொடுத்த அமரன் படத்தை இயக்கியவர் ராஜேஷ்வர். அதேபோல நெப்போலியனுக்கு பிரேக் கொடுத்த சீவலப்பேரி பாண்டியை இயக்கியவர்.
நீண்ட காலமாக காணாமல் போயிருந்த ராஜேஷ்வர், இப்போது இந்திரவிழி மூலம் திரும்பி வருகிறார். இந்தப் படத்தையும் ஸ்ரீகாந்த் பெரிதும் எதிர்பார்க்கிறார்.
இது போக ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்கவுள்ளாராம் ஸ்ரீகாந்த். இதில் அவருடன் பிருத்விராஜும் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் ஸ்ரீகாந்த்.
இந்தப் படங்கள் வரிசையாக வந்து தொய்ந்து போயுள்ள எனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என படு தெம்பாக கூறுகிறார் ஸ்ரீகாந்த்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!