twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிளாக்கில் அவதூறு மெசேஜ்-பிளாக்கர் மீது அமிதாப் பச்சன் போலீஸில் புகார்

    By Sudha
    |

    Amitabh Bachchan
    மும்பை: தனது பிளாக்கில் தொடர்ந்து அவதூறான தகவல்களை அனுப்பி வந்த பிளாக்கர் மீது மும்பை போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

    பிளாக்கோடு நிற்காமல், அமிதாப்பின் செல்போனுக்கும் அவதூறான எஸ்எம்எஸ்களை அவர் அனுப்பி வருகிறாராம்.

    இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது...

    எனது பிளாக்கைப் பயன்படுத்தி ஒரு நபர் தொடர்ந்து அவதூறாக எழுதி வருகிறார். மிகவும் ஆபாசமான, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது அவரது செயல்.

    எனது செல்போனுக்கும் கூட அவர் இதுபோன்ற எஸ்எம்எஸ்களை அனுப்பி வருகிறார்.

    இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். இதுபோன்ற எந்த ஒரு ஆபாசமும் எனது பிளாக்கை அடையாமல் தடுக்க வேண்டும் என கோரியுள்ளேன்.

    எனவே அந்த நபர் மீண்டும் இதுபோல நடந்து கொண்டால் நிச்சயம் சைபர் கிரைம் போலீஸ் வசம் சிக்குவது உறுதி என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X