பேரன்களைப் பார்த்தார் ரஜினி!

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சைப் பெற சிங்கப்பூரில் உள்ள ஆசியாவின் மிகச் சிறந்த மருத்துவமனையான மவுன்ட் எலிசபெத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார்.
டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார்.
சென்னையிலிருந்து மனைவி லதாவுடன் வந்திருந்த பேரக் குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்காவை கொஞ்சி மகிழ்ந்தார்.
ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments


Click it and Unblock the Notifications