Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திடீர் கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
பெற்றோரை எதிர்த்து, தான் விரும்பிய பெண்ணையே துணிச்சலாக திருமணம் முடித்த களவாணி படப் புகழ் விமல், இப்போது பெற்றோருடன் சமாதான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். களவாணி படத்திலும் நாயகனாக நடித்தார். விமலுக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ப்ரியா என்ற பெண்ணுக்கும் திடீர் திருமணம் நடந்தது. ப்ரியா சென்னையில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் ப்ரியா பெற்றோர் காதலை ஏற்கவில்லை. சினிமாக்காரருக்கு பெண் தரமாட்டோம் என மறுத்துவிட்டனர். இதனால் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள்.
இதுகுறித்து விமல் கூறுகையில், "ப்ரியா என் மாமா மகள். சின்ன வயதிலிருந்து பழக்கம். நான் சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். ப்ரியாவும் டாக்டருக்கு படிக்க சென்னை வந்தார். அப்போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.
எங்களுக்குள் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். ப்ரியா அப்பாவை சந்தித்து காதல் பற்றி சொல்லி பெண் கேட்டேன். அவர் சினிமா நடிகனுக்கு பெண் தர மாட்டேன் என் பெண்ணுக்கு, டாக்டர் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
எனவேதான் வேறு வழியில்லாமல் சுவாமிமலை கோவிலில் அவசரமாக திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை பதிவும் செய்து கொண்டோம். இப்போது என் வீட்டில் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். ப்ரியா வீட்டில் இருந்து எந்த தகவலும் இல்லை. அவர்களும் சமாதானமாகிவிடுவார்கள் என்று நம்புகிறேன்.
சென்னையில் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம்...", என்றார்.