Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திடீர் கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
பெற்றோரை எதிர்த்து, தான் விரும்பிய பெண்ணையே துணிச்சலாக திருமணம் முடித்த களவாணி படப் புகழ் விமல், இப்போது பெற்றோருடன் சமாதான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். களவாணி படத்திலும் நாயகனாக நடித்தார். விமலுக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ப்ரியா என்ற பெண்ணுக்கும் திடீர் திருமணம் நடந்தது. ப்ரியா சென்னையில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் ப்ரியா பெற்றோர் காதலை ஏற்கவில்லை. சினிமாக்காரருக்கு பெண் தரமாட்டோம் என மறுத்துவிட்டனர். இதனால் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள்.
இதுகுறித்து விமல் கூறுகையில், "ப்ரியா என் மாமா மகள். சின்ன வயதிலிருந்து பழக்கம். நான் சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். ப்ரியாவும் டாக்டருக்கு படிக்க சென்னை வந்தார். அப்போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.
எங்களுக்குள் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். ப்ரியா அப்பாவை சந்தித்து காதல் பற்றி சொல்லி பெண் கேட்டேன். அவர் சினிமா நடிகனுக்கு பெண் தர மாட்டேன் என் பெண்ணுக்கு, டாக்டர் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
எனவேதான் வேறு வழியில்லாமல் சுவாமிமலை கோவிலில் அவசரமாக திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை பதிவும் செய்து கொண்டோம். இப்போது என் வீட்டில் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். ப்ரியா வீட்டில் இருந்து எந்த தகவலும் இல்லை. அவர்களும் சமாதானமாகிவிடுவார்கள் என்று நம்புகிறேன்.
சென்னையில் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம்...", என்றார்.