Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திடீர் கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
பெற்றோரை எதிர்த்து, தான் விரும்பிய பெண்ணையே துணிச்சலாக திருமணம் முடித்த களவாணி படப் புகழ் விமல், இப்போது பெற்றோருடன் சமாதான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். களவாணி படத்திலும் நாயகனாக நடித்தார். விமலுக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ப்ரியா என்ற பெண்ணுக்கும் திடீர் திருமணம் நடந்தது. ப்ரியா சென்னையில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் ப்ரியா பெற்றோர் காதலை ஏற்கவில்லை. சினிமாக்காரருக்கு பெண் தரமாட்டோம் என மறுத்துவிட்டனர். இதனால் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள்.
இதுகுறித்து விமல் கூறுகையில், "ப்ரியா என் மாமா மகள். சின்ன வயதிலிருந்து பழக்கம். நான் சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். ப்ரியாவும் டாக்டருக்கு படிக்க சென்னை வந்தார். அப்போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.
எங்களுக்குள் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். ப்ரியா அப்பாவை சந்தித்து காதல் பற்றி சொல்லி பெண் கேட்டேன். அவர் சினிமா நடிகனுக்கு பெண் தர மாட்டேன் என் பெண்ணுக்கு, டாக்டர் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
எனவேதான் வேறு வழியில்லாமல் சுவாமிமலை கோவிலில் அவசரமாக திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை பதிவும் செய்து கொண்டோம். இப்போது என் வீட்டில் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். ப்ரியா வீட்டில் இருந்து எந்த தகவலும் இல்லை. அவர்களும் சமாதானமாகிவிடுவார்கள் என்று நம்புகிறேன்.
சென்னையில் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம்...", என்றார்.