Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கேரளா எனக்கு இன்னொரு அம்மா' - கமல்
கலையுலகில் நடிகர் கமல்ஹாசனின் 50 ஆண்டு கால சாதனையைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு கேரள அரசாங்கம் திருவனந்தபுரத்தில் பாராட்டுவிழா நடத்தியது.
கேரள முதல்வர் அச்சுதானந்தன், கல்வி மந்திரி பேபி உள்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று கமலுக்கு மரியாதை செய்த அந்த விழாவில் மலையாள நடிகர்-நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
அந்த விழாவில், இயக்குநர் கே.பாலசந்தர் கலந்துகொள்வதாக இருந்தார். சென்னையில் நடந்த முதல்வர் சம்பந்தப்பட்ட விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டியது இருந்ததால், கமல்ஹாசன் பாராட்டுவிழாவில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.
இதுதொடர்பாக இயக்குநர் பாலசந்தர், கமல்ஹாசனை பாராட்டி ஒரு அறிக்கை விடுத்தார். அதில், "காந்திக்கு அடையாளம் கண்ணாடி, பாரதியாருக்கு அடையாளம் மீசை. எம்.ஜி.ஆருக்கு அடையாளம் தொப்பி. நேருவுக்கு அடையாளம் ரோஜா. ஆனால், கமல்ஹாசன் ஒரு ஆச்சரியக்குறி" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கமல் கருத்து தெரிவிக்கையில், "பாலச்சந்தர் என்னுடைய குரு. பொதுவாக குருநாதர்கள் காசு வாங்கிக் கொண்டு வித்தை கற்றுத் தருவார்கள். ஆனால் அவர் என்னிடம் காசு வாங்காமல், காசு கொடுத்து கற்றும் கொடுத்தார். அப்படிப்பட்டவர் என்னை ஆச்சர்யக்குறி என்று சொன்னதற்கு நான் தகுதியானவன்தானா? தெரியவில்லை", என்றார்.
கேரள அரசின் பாராட்டு மற்றும் மலையாள நடிகர்களின் புறக்கணிப்பு பற்றி மேலும் அவர் கூறுகையில், "கேரள அரசாங்கம் எனக்கு பாராட்டுவிழா நடத்தியது சந்தோஷமான விஷயம். என் ஆரம்ப காலம் மலையாள படஉலகில்தான் தொடங்கியது. நான் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்னை ஒரு கலைஞனாக ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு கலைதான் காரணம். அந்த பலம், கலைக்குத்தான் உண்டு.
'எனக்கு கேரளா இன்னொரு அம்மா!'
மற்ற மாநிலத்தவர்களை விட கல்வியறிவு அதிகம் உள்ளவர்கள் கேரள மக்கள். எனக்கு அவர்கள் ஓர் அங்கீகாரம் கொடுத்ததுடன் மண்ணின் மைந்தன் போல் நடத்தினார்கள். கணியன் பூங்குன்றனார், "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று சொன்னார். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. அரசியல், பூகோளம் காரணமாகத்தான் தமிழ்நாடும், கேரளாவும் பிரிந்துள்ளன.
கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். கல்யாண வீட்டில் வரும் கருத்து வேறுபாடு போன்றுதான் கேரளாவில் நடந்த சம்பவமும். மலையாள நடிகர்கள் அனைவரும் என் சகோதரர்கள்தான். எனக்கு தமிழ்நாடு ஒரு அம்மா என்றால் கேரளா இன்னொரு அம்மா.
சின்ன வயதில் எனக்கு இரண்டு அம்மா இருந்தார்கள். ஒரு அம்மா என்னை பெற்ற தாய். இன்னொரு அம்மா என் அண்ணியார். அந்த இரண்டு அம்மாக்களும் சேர்ந்துதான் என்னை வளர்த்தார்கள். அதுபோல் இப்போதும் எனக்கு இரண்டு அம்மாக்கள் இருக்கிறார்கள். "தீதும் நன்றும் பிறர்தர வாரா'' என்பார்கள். நான் எந்த வகையிலாவது என் சகோதரர்களை புண்படுத்தி இருப்பேனோ என்று எனக்கு தெரியாது...,"என்றார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!