அமிதாப் பச்சன் பாணி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் விஜய்?
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதே போன்று தமிழகத்தில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்தது. இதையடுத்து பல சேனல்களும் குரோர்பதி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும் அவை ஒரிஜினல் நிகழ்ச்சி அவ்வளவு பிரபலமாகவில்லை.
இந்நிலையில் பிரபல சேனல் ஒன்று கோடீஸ்வரன் போன்று ஒரு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதை பிரபலமான ஒருவர் தான் நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியாளர் நினைத்தார்.
அதன்படி பிரபலங்களின் பட்டியல் தயார் செய்து பரிசீலித்தார்கள். இறுதியில் விஜய்யை தேர்வு செய்து அவரை அணுகியுள்ளனர். ஆனால் கோடி கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இருப்பினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்போது விஜய் தலையை ஆட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த ரூபத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கலாம், விஜய் டிவிக்கு வருகிறாரா, இல்லையா என்று.


Click it and Unblock the Notifications












