Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஒன்வே'யில் வந்ததால் ரூ 100 அபராதம் செலுத்திய அமீர்கான்!
பாலிவுட்டின் முதல்நிலை நடிகரான அமீர்கான் தனது விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் மும்பை பஞ்ச்கானியில் இருந்து சதாராவுக்கு மனைவி கிரண் ராவுடன் சென்று கொண்டிருந்தார்.
சதராவில் உள்ள ஒரு சாலையில் ஒருவழிப்பாதை (நோ என்டரி) என்பதைக் கவனிக்காமல் அமீர்கான் காரை ஓட்டிச்சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அமீர்கான் காரைத் தடுத்து நிறுத்தினார்.
போக்குவரத்து விதியை மீறியதாக அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தார். காரில் இருப்பது அமீர்கான் என்பது போலீஸ்காரருக்கு முதலில் தெரியவில்லை.
இதற்கிடையே அவரை அடையாளம் கண்டு ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்கள் அமீர்கானுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று போலீசாரை கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அமீர்கான் , "அவர் தன் கடமையை மிகச் சரியாக செய்துள்ளார். அவரை எதுவும் சொல்லாதீர்கள். தவறு என்னுடையது," என்று கூறி தானே முன்வந்து ரூ.100 அபராதம் செலுத்தினார். மேலும் அவர் கூறுகையில், "தவறு யார் செய்தாலும் தன் அந்தஸ்தைக் காட்டி யாரும் தப்பிக்க முயலக்கூடாது. இதை மக்களும் புரிந்து கொண்டு, போலீசார் மீது ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கவேண்டும்," என்றார்.
அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டு தான் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று, வேறு பாதையில் தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றார்.