Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்யும் ஆமீர் கான்
பாலிவுட் நடிகர் ஆமீ்ர் கான் உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் ஷாபாத்தைச் சேர்ந்தவர். ஆனால் தொழில் காரணமாக மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது பெரியப்பா நசீர் ஹுசைன் மற்றும் சில உறவினர்கள் தங்கள் வீடுகளை விற்க முயயற்சிக்கின்றனர் என்ற செய்தி ஆமீரின் காதுக்கு வந்தது. பூர்வீக சொத்துக்கள் வேறு யாருக்கோ செல்வதைவிட தானே வாங்கிவிடலாம் என்று அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் தனது உறவினர்களின் 22 வீடுகளை அண்மையில் வாங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்த வீடுகளை வாங்கியது சென்டிமென்ட்டானது. நான் எனது சொந்த ஊரான ஷாபாத்தில் மிகக் குறைவான நாட்களே இருந்துள்ளேன். எனது உறவினர்கள் தங்கள் வீடுகளை விற்க முடிவு செய்துள்ளது பற்றி கேள்விப்பட்டதுடன் அதை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன். நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், இப்பொழுதும் கூறுகிறேன் நான் வருங்காலத்தில் விவசாயம் செய்யவிருக்கிறேன். நான் தற்போது வாங்கியுள்ள நிலம் விவசாயத்திற்கு உகந்தது. நான் ஷாபாத்திற்கு சென்று விவசாயம் செய்வேன்.
எங்களின் பூர்வீக வீட்டில் எனது தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒன்றாக வாழ ஆசை. ஆனால் இது எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை. எனது சகோதரர் மற்றும் சகோதரிகளின் பிள்ளைகளும் எங்களுடன் வந்து தங்கலாம் என்றார்.