Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான், உதய் சோப்ரா இல்லாமல் தூம் படம் இல்லை: அபிஷேக் பச்சன்
மும்பை: தூம் 3 படம் என்னுடையது, அதன் ஹீரோ நான் தான் என்று இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
தூம், தூம் 2 மற்றும் தூம் 3 ஆகிய படங்களில் போலீஸ்காரராக நடித்து வந்துள்ளார் அபிஷேக் பச்சன். முதல் படத்தில் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்தார். தூம் 2ல் ரித்திக் ரோஷன் வில்லனாக நடித்தார். இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தூம் 3 படத்தில் ஆமீர் கான் வில்லனாக நடித்துள்ளார்.
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஆமீர் கான், கத்ரீனா கைஃபுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கு தனக்கு முக்கியத்துவம் அளிக்காதது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது போன்று.
என் படம்
தூம் என் படமாக்கும். நான் தான் படத்தின் ஹீரோ. அதை யாரும் என்னிடம் இருந்து எடுக்க முடியாது. நீங்கள் பெரிய அல்லது சிறிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் தூம் ஜெய் மற்றும் அலியை பற்றியது என்று அபிஷேக் தெரிவித்தார்.
ஜெய், அலி
தூம் படங்களில் அபிஷேக் ஜெய் தீக்சித்தாகவும், உதய் சோப்ரா அலி அக்பராகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அபிஷேக் கூறுகையில், ஜெய் மற்றும் அலி கதாபாத்திரங்கள் இல்லை என்றால் தூம் படம் இல்லை என்றார்.
எங்கு அழைத்தாலும்
படத்தின் விளம்பர யுக்திகளை நான் ஒன்றும் பரிந்துரைக்கவில்லை. இது என் படம். என்னை எங்கு வரச் சொன்னாலும் நான் வருவேன் என்று அபிஷேக் தெரிவித்துள்ளார்.
தூம்
தூம் படத்திற்கு எந்த ஸ்டார்களும் தேவையில்லை. படத்திற்கு ஆமீர், நான் மற்றும் உதய் தேவையில்லை. புதுமுகங்களை போட்டாலும் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்றார் அபிஷேக்.
ஒதுக்குகிறார்களா?
என்னை ஒதுக்குகிறார்கள் என்று நான் ஏன் நினைக்க வேண்டும். படத்தில் இருந்து என்னை பிரிக்க முடியாது. இது யாருடைய படம் என்று ரசிகர்கள் பார்ப்பதில்லை. இந்நாள் வரை சிறந்த படமாக உள்ள அமர் அக்பர் அந்தோணியில் என் அப்பா, வினோத் கன்னா, ரிஷி கபூர் மற்றும் பிறர் நடித்திருந்தனர். அது அனைவருடைய படமாகும் என்று அபிஷேக் கூறினார்.