Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
செஞ்சி கோட்டையில் பரபரக்கும் பகவான் ஷூட்டிங்... மழையால் ஏற்பட்ட வெள்ளம்.. மனம் திறந்த ஆரி!
சென்னை: செஞ்சி கோட்டையில் பகவான் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ஆரி அதுகுறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ஆடும் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜூனன். தொடர்ந்து ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர்களுடன் கைகோர்க்கும் தனுஷ்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
கடைசியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தார். தற்போது அலேகா, பகவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆரி அர்ஜூனன்.
பிக்பாஸ் சீசன் 4 வின்னர்
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஆரி. இதில் நிதானமாகவும் நேர்மையாகவும் விளையாடினார். ஹவுஸ்மேட்ஸ் பலரும் அவருக்கு எதிராய் இருந்தபோதும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் விளையாடினார்.
பகவான் படத்தில் ஆரி அர்ஜூனன்
இதனால் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஆரி, பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்றார். தற்போது ஆரி நடித்து வரும் பகவான் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆரி அர்ஜுனன் பகவான் என்ற மித்தாலிஜிக்கல் த்ரில்லரில் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக அண்மையில் அரண்மனை போன்ற செட்டில் ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சியை படக்குழு படமாக்கியது.
செஞ்சி கோட்டையில் படப்பிடிப்பு
இதனை தொடர்ந்து படக்குழு சமீபத்தில் செஞ்சி கோட்டையில் க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதுகுறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ஆரி. அவர் கூறியிருப்பதாவது, "செஞ்சி கோட்டையில் படப்பிடிப்பு நடத்த தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
கோட்டைக்குள் குகை உள்ளது
கொரோனா பெருந்தொற்று காரணமாக, அவர்கள் எளிதில் அனுமதி வழங்கவில்லை, ஆனால் நாங்கள் காத்திருந்து படப்பிடிப்புக்காக அனுமதி பெற்றோம். ஏனெனில் புராண கதையை உள்ளடக்கியது என்பதால் அந்தக் காட்சியை அங்கு படமாக்குவதில் நாங்கள் தீர்க்கமாக இருந்தோம். கோட்டைக்குள் ஒரு குகை உள்ளது. மழை பெய்யும்போது வெள்ளம் வருகிறது.
தண்ணீரை வெளியேற்றி படப்பிடிப்பு
நாங்கள் தரையிறங்கியபோது, அந்த இடம் முழுக்க தண்ணீர் நிரம்பியிருந்தது. நாங்கள் எல்லா நீரையும் வெளியேற்றி, அந்த இடத்தை உலர வைத்து பின்னர் படப்பிடிப்பை நடத்தினோம்" இவ்வாறு நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காளிங்கன் இயக்கத்தில் பகவான்
அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். காளிங்கன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக தெரிகிறது.