பாய்ஸ்&கேர்ள்ஸ் திருமணம் செய்யப்போறீங்களா?.. சாக்லேட் பாய் அப்பாஸ் சொல்லும் ஐடியாவை கொஞ்சம் கேளுங்க
சென்னை: ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல பெண்களின் க்ரஷ்ஷாக வலம் வந்தவர் அப்பாஸ். தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவருக்கு மார்க்கெட் சரிந்ததை அடுத்து வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அவர். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்திருக்கும் பேட்டி இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கதிர் இயக்கிய காதல் தேசம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான அப்பாஸ் முதல் படத்திலேயே வெற்றி என்றால் என்னவென்று பார்த்துவிட்டார். அந்தப் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தொடர்ந்து நடித்தார். ஆனால் அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்தன. அதனைத் தொடர்ந்து படையப்பா, பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி ஒருகட்டத்தில் கோடம்பாக்கத்திலிருந்து காணாமல் போய்விட்டார்.

வெளிநாட்டில்: அவருக்கு ஏற்பட்ட விபத்து, பொருளாதார நெருக்கடி என பல சிக்கல்களை கடந்து வெளிநாட்டில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். மீண்டும் அவருக்கு நடிக்கும் எண்ணம் வர தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த ஹேப்பி ராஜ் படத்தில்தான் அவர் கம்பேக் கொடுத்தார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து அவர் தமிழுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "வாழ்க்கையில் பிரேக் அப்தான் ரொம்ப கஷ்டமான ஒன்று.ஒரு பொருளை உடைத்துவிட்டால் மீண்டும் அதை ஒட்ட வைக்கலாம். ஆனாலும் அந்தப் பொருளின் மீது அந்த விரிசல் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் பிரேக் அப்பும். நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த தவறு என்னவென்றால்; ரொம்பவே சீக்கிரமாகவே திருமணம் செய்துகொண்டதுதான். இன்னும் கொஞ்சம் தாமதமாக, இன்னும் பக்குவம் வந்த பிறகு திருமணம் செய்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
மகனிடம் அதைத்தான் சொல்வேன்: முதலில் நீ உன்னிடமே நேரத்தை செலவிடு. உனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, நீ யார் என அனைத்தும் உனக்கு தெரிந்துவிடும். அப்போது கேர்ள் ஃப்ரெண்டோ, பார்ட்னரோ கிடைப்பது ஈஸி என்றுதான் என்னுடைய மகனிடம் சொல்வேன். அது தெரியாமல் ரிலேஷன்ஷிப்புக்குள் சென்றால் பிரச்னைதான் வரும். நான் 21 வயதிலே திருமணம் செய்துவிட்டேன். 22 வயதில் மகன் பிறந்துவிட்டான். 29 வயதில் திருமணம் செய்திருக்கலாம். எந்த ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் தினமும் அதற்காக வேலை செய்ய வேண்டும். இரண்டு பேரும் சேர்ந்துதான் அந்த ரிலேஷன்ஷிப்பை நன்றாக கொண்டு செல்ல வேண்டும்.
எனக்கு கொடுக்கும் அட்வைஸ்: 90களில் இருக்கும் அப்பாஸை நான் இப்போது பார்த்தால் இன்னும் கொஞ்ச்ம் சென்சிபிளாக, பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும். ரொம்ப தீவிரமாக யோசித்து ஜாக்கிரதையாக ஒரு முடிவை எடு என்றுதான் 90களில் இருக்கும் அப்பாஸிடம் சொல்வேன் " என்றார்.


Click it and Unblock the Notifications
