கிண்டல் பண்றவன் யாரும் சோறு போடமாட்டான்.. 8 வருஷம் சோறு போட்ட விளம்பரம்.. அப்பாஸ்!
சென்னை: காதல் தேசம் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி, தொடர்ந்து பட படத்தில் நடித்து இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தார் அப்பாஸ். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக சினிமாவை விட்டு விலகிய அப்பாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
கட்டுனா அப்பாசைப்போலே இருப்பவரைத்தான் கட்டுவேன் என ஒரு காலத்தில் கன்னிப்பெண்கள் பலர் தவம் கிடந்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் கன்னி ப்பெண்களின் மனதில் இடம்பிடித்து இருந்த அப்பாஸ் மின்னலே, விண்ணுக்கும் மண்ணுக்கும்,பம்பல் கே சம்மந்தம், சுயம்வரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திடீரென படவாய்ப்பு குறைந்து போக, குடும்பத்துடன் நியூசிலாந்தில் குடியேறிவிட்டதாக சொல்லப்பட்டது. தற்போது நடிகர் அப்பாஸ் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தில் முக்கியமான ரோலி ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மரியா ராஜா இயக்கவுள்ள இந்த படத்தில்,லவ்வர் பட நடிகை கவுரி பிரியா ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார்.



Click it and Unblock the Notifications











