Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பேஸ்புக் லைவில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக..பிரபல நடிகர் கைது..திரையுலகில் திடீர் பரபரப்பு
மும்பை: வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசியதாக பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராம் கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா, லம்பா உட்பட சில இந்தி படங்களில் நடித்திருப்பவர் அஜாஸ் கான்.
தெலுங்கில் மகேஷ்பாபுவின் தூக்குடு, ராம்சரணின் நாயக், ஜூனியர் என்.டி.ஆரின் டெம்பர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
காஜலை தொடர்ந்து தமன்னா.. தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி.. தமிழ் சினிமாவுக்கு?
மும்பை பாந்த்ரா
இவர், இந்தி பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிகம் பிரபலமானார். டிவி.சீரியலிலும் நடித்துள்ளார். கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த 14ஆம் தேதியோடு முடிவடையும் என நினைத்து, தங்கள் ஊர்களுக்கு செல்ல, வெளிமாநில தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா ரயில்வே ஸ்டேஷனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றிருந்தனர்.
அஜாஸ் கான்
ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தகவல் வெளியானதால் ஆத்திரமடைந்த அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பேஸ்புக் லைவில் பேசிய நடிகர் அஜாஸ் கான், வெறுப்பைத் தூண்டும் வகையில் சர்ச்சையான கருத்துக்களை கூறினாராம்.
வழக்குப் பதிவு
இதனால் சமூக வலைத்தளங்களில் இதுபற்றி விவாதம் கிளம்பியது. இதையடுத்து அவரை மும்பையில் உள்ள கர் காவல் நிலையத்துக்கு அழைத்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் கைது செய்துள்ளனர். அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கர் காவல் நிலைய ஆய்வாளர் கஜனன் கப்துலே உறுதிப் படுத்தியுள்ளார்.
கடுமையான பிரிவு
'நடிகர் அஜாஸ் கானை கைது செய்தது உண்மைதான். அவர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெறுப்பைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதனால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது' என்று தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டும் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக அஜாஸ் கான் கைது செய்யப்பட்டிருந்தார்.
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!