Don't Miss!
- News அதிமுக வேண்டாம்? பாமக முடிவுக்கு என்ன காரணம்? மொத்த டேட்டா இதோ!
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கடும் அப்செட்டில் நடிகர் அஜித்.. மர்ம நபரை தேடும் போலீசார்
சென்னை: நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்து உடனடியாக 'கட்' செய்துள்ளார்.
Recommended Video
ஊரடங்கு நேரத்தில் ஏற்கனவே போலீசார் கொரோனாவை கட்டுப்படுத்த ஓய்வின்றி உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படியொரு மர்ம கால் வந்ததும் அதனை உதாசினப்படுத்தாமல் உடனடியாக நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.
கொரோனாவுக்கு தாய் பலி...மனதை உலுக்கிய அஜித், கமல் பட குழந்தை நட்சத்திரத்தின் சோகம்
வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மர்ம நபர் ஒருவர் சென்னை கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்து பரபரப்பை கிளப்பினார். உடனடியாக அந்த போன் துண்டிக்கப்பட்ட நிலையில், போலீசார் மோப்ப நாய்களுடன் தல அஜித் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
ஒரு மணி நேர சோதனை
மர்ம நபரிடம் இருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக நடிகர் அஜித்திடம் பேசிவிட்டு, அவரது வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் மோப்ப நாய்களை வைத்து சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு இல்லை
ஆனால், ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்பது உறுதி ஆகி உள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் வீட்டில் நிம்மதியாக இருக்கும் பிரபலங்களையும் சும்மா விட்டு வைக்காமல் இப்படி ஏன் தான் தொல்லை தருகிறார்களோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டும்
கடந்த ஆண்டும் இதே போல மர்ம நபர் ஒருவர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்ய போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அது புரளி என்பது உறுதியானது. அதே போலவே இந்த ஆண்டும் தல அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளம்பி உள்ளது. போன் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு தான்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட இந்த ஆண்டு வெளியாகுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. வலிமை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் மீதம் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறைக்கு படம் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.